Monday, November 18, 2013

சிறப்பாக பொதுநலவாய மாநாட்டை இலங்கை நடத்தியமையால் இலங்கையிடம் உதவி கோரும் வனாட்டு பிரதமர்

2017ம் ஆண்டு பொது நலவாய அரச தலைவர்கள் மாநா ட்டிற்கான ஏற்பாடுகளை மேற் கொள்வதற்கு வனாட்டு இராச்சியம் இலங்கையின் உதவியை கோரியுள்ளது. அந்த வகையில் வனாட்டு பிரதமர் மோனா கர்கசெஸ் கெலோசில் பத்தரமுல்லை வோட்டர் ஏஜில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இவ்வாறான உதவியை கோரியுள்ளார்.

2013ம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த வனாட்டு பிரதமர் 2017ம் ஆண்டு தமது நாட்டில் நடைபெறும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கையின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வாறான உதவியை வழங்க தாம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையை தனது சொந்த நாடு போல் மதிப்பதாக தெரிவித்த வனாட்டு பிரதமர் தமது நாட்டு மக்களை போன்று இலங்கையர்களும் ஏனைய மக்களோடு நட்புறவு ரீதியாக செயற்பட கூடியவர்கள் என தெரிவித்தார். வனாட்டு இராச்சியம் உலகில் மகிழ்ச்சிகரமான மக்களை கொண்ட நாடென 2 முறையாகவும் வகைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com