Tuesday, November 26, 2013

சிறுவனை சிறுநீர் கழிக்க விடாமல் செய்த அட்டமஸ்கட பிக்குவுக்கு எதிராக மேலும் ஒரு சிறுவன் முறைப்பாடு

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் வட மாகாண சங்க நாயக்க பிக்குவின் கீழ் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவர்களை பிக்குவாகிய கல்யாணதிஸ்ஸ தேரர் துஸ்பிரயோகம் செய்ததாகவும், அதனால் சிறுநீர் கழிக்க முடியாது அவதிப்பட்ட சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டையடுத்து பிக்கு கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் இப் பிக்கு தன்னையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 12 வயது சிறுவன் ஒருவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளான். கைது செய்யப்பட்டுள்ள பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com