Thursday, November 28, 2013

சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வயோதிப நோயாளியால் வல்லுறவு - பதுளையில் சம்பவம்!

தியத்தலாவ அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் வயோதிபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தியத்தலாவ அரச வைத்தியசாலையில் ஆறாவது (6) வாட்டில் சிகிச்சை பெற்றுவந்த (62) வயது நபர் ஒருவர் அதேவாட்டில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுவனொருவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோ கத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.தியத்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸார் ஆறாவது வாட்டில் சிகிச்சைப்பெற்றுவந்த (62) வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அப்புத்தளை நீட்வூட் தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவனே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com