Thursday, November 28, 2013

கிழக்கு மாகாணத்தில் நடமாடும் தேசிய ஆளடையாள அட்டை சேவை!

கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆளடையாள அட்டையில்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இடம்பெயர் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகம் தோறும் நடைபெற்று வருகின்றது.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மஜீத், உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவை அலுவலகர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் கபே நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் என்பன ஆளடையாள அட்டையில்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவைக்கான நிதி அனுசரணை வழங்குகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com