Sunday, November 3, 2013

படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதி!

வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரி அதிபர் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கும் அங்கிருந்து பேராதனை போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட் டுள்ளார்.

அவருடைய வீட்டுக்கு சமீபமாக வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று இவரை மோதியுள்ளது இதனால் அவருடைய இடது முழங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரி விக்கப்படுகின்றது.

இக்கல்லூரியில் சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் முதலாம் தர அதிபரான இவர் ஆசிரியர் சேவையில் சுமார் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார். அடுத்த சில மாதங்களில் ஆசிரியர் செவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர் பாடசாலையில் நடைபெறவிருந்த அபிவிருத்தி சங்க கூட்டம் மற்றும் பெற்றோருக்கிடையிலான விசேட கூட்டத்தில் வருகை தரவிருந்த போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

வரக்காபொலை ஆதார வைத்தயிசாலையிலோ கேகாலை தள வைத்தியசாலை யிலோ முறிவு சம்பந்தமான மருத்துவர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com