Saturday, November 23, 2013

மனைவியையும், மகளையும் கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் கைது!

தென்மராட்சியின் கொடிகாமம் கச்சாய் பகுதியில் மனை வியையும், மகளையும் வெட்டிப்படுகொலை செய்த குற் றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த கணவன் கைதாகி யுள்ளார். தலைமறைவாகியிருந்த பகுதியினில் வைத்து தம்பலகாமம் பொலிஸார் இவரை கைது செய்து ள்ளனர்.கொடிகாம் தேவாலய வீதியைச் சேர்ந்த லோகே ஸ்வரன் ஜெயமேரி (வயது 36) அவரது மகளான லோகே ஸ்வரன் மேரிஜோகினி (வயது 15) என்பவர்களே கடந்த புரட்டாதி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரான தந்தையார் திருகோண மலை தம்பலகாமம் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், தம்பலகாமம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சந்தேக நபரை கொடிகாமம் பொலிஸார் இன்று வியாழ க்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com