Friday, November 1, 2013

அவுஸ்திரேலியாவையும் விட கூடுதலானனோர் இங்கு வருவர்! கெஹெலிய

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டிலும் பார்க்க, கூடுதலான அரச தலைவர்கள், இலங்கையில் இம்முறை நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளதென, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

37 நாடுகள், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக, உறுதியளித்துள்ளன. அடுத்த சில நாட்களில் ஏனைய நாடு களும், இதில் பங்கேற்பதை உறுதிப்படுத்துவார்கள் என, நாம் எதிர்பார்க்கின்றோம். கடந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க, கூடுதலானோர், இம்மாநாட்டில் கலந்து கொள்வது, உறுதி என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com