Monday, November 25, 2013

தங்கம் கடத்திய 56 இலங்கையர்கள் இந்திய விமான நிலையத்தில் கைது!

இலங்கையில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திச் சென்ற 56 இலங்கையர்கள் நேற்று (24.11.2013) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் இருந்த 28 பெண்கள் மற்றும் 14 ஆண் பயணிகளிடம் நடத்திய சோதனையில் அவர்கள் மறைத்து கொண்டு வந்த மொத்தம் 10 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது அவர்களின் விசாவை பரிசோதித்ததில், அவர்கள் அடிக்கடி கொழும்புவில் இருந்து விமானத்தில் தென்னிந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு பயணித்திருப்பதுடன் ஒரே நாளில் அவர்கள், கொழும்பில் இருந்து புறப்பட்டு மீண்டும் திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் அனைவரையும் கொழும்பில் உள்ள ஒரு கும்பல் தங்கம் மற்றும் பொருட்களை கடத்தி செல்வதற்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com