Wednesday, November 20, 2013

செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை இல்லை- முத்தையா முரளீதரன்!

செனல்4 ஊடகத்திற்கு தாம் அளித்த செவ்வி தொகுக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை கிடையாது என இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்

மேலும் தமது கருத்துக்களை 45 நிமிடங்கள் பதிவு செய்துவிட்டு அதில் மூன்று நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்புச் செய்தமை ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்பதுடன் தமது கருத்துக்கள் முழுமையான ஒளிபரப்பு செய்யப்படவில்லை என தெரிவித்ததுடன் செனல்4 ஊடகத்தின் மீதான நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிட இவ்வாறு செவ்வியை திரிபுபடுத்தி ஒளிபரப்புச் செய்வது ஊடக ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியதுடன் முழு அளவில் செவ்வி ஒளிபரப்புச் செய்யப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தாம் இந்த செவ்வியை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் செவ்விகள் எதையும் அளிக்க வேண்டும் என்ற அவசியம் தமக்கு இருக்கவில்லை எனவும், செனல்4 ஊடகம் தம்மை வேண்டிக் கொண்டதனை அடுத்தே தாம் செவ்வி வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியதுடன் செவ்வியின் ஒரு பகுதி மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்படும் எனின் அவர்கள் தமத கருத்துக்களை பதிவு செய்யும் போது குறிப்பிட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  November 20, 2013 at 6:35 PM  

Your interview is Perfect With very With good explaines and thank you Mr. Muralitharan.

Every Sri Lankans knows well about Channel4. thay are working only for LTTE and LTTE Diasporas - World Tamil Forum and British Tamil Forum.

Becouse, Channel 4 getting much funds from those Group and Camroon also working for those Group due to Election only.

Think abaout, how can say thay did not have a capasity to pay for flight ticket to U.S for getting interview withy S.L army chief!

Thay are intelligence.

Anonymous ,  November 21, 2013 at 9:08 AM  

சணல்-4 கலம்மக்ரே ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறார் என்பது தெரியவில்லை.

தான் புலிகளுக்காக கதைக்கவில்லை. அரசாங்கம் நடந்து கொண்ட மனிதஉரிமை மீறலுக்காகத் தான் கதைக்கிறோம் என்று ஒரே வாய்பாட்டையே திரும்பதிரும்ப ஒப்பிவிக்கிறார்.

பல நுறு தற்கொலைப் போராளிகள் பயங்கரஆயுதங்கள் பங்கர்பாதுகாப்பு இப்படியான வசதிகளுடன் இருந்து கொண்டு தான் மூன்றுலட்சம் வன்னிமக்களை ஆயுதமுனையில் பிடித்து வைத்திருந்தான் பிரபாகரன்.

இலங்கைராணுவம் பிரபாகரன் முகத்தை கண்டதே மேமாதம் 17-18 திகதி.அதுவும் வன்னிமக்கள் முழுமையாக பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்பே!.

கலம்மக்ரே பிரபாகரன் விஷயத்தில் எப்படியான வழிமுறைகளை கையாண்டிருக்க வேண்டுமென நினைக்கிறார்?

பேசித்தீர்ப்பதற்கு புலிகள் மனிதர்கள் இல்லையே!.

இதை கலம் விளங்கிக் கொள்வாரா? இல்லை யாராவது புரிய வைக்கத்தான் முடியுமா??.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com