TNA மந்திரிமாரில் எழுவர் பிரபாகரன் இறுதிமூச்சுவிட்ட முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணமாம்....!
அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்வதை நிறுத்திவைத்திருந்து. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் 09 பேரும் தற்போது சத்தியப் பிரமாணம் செய்வதற்கு தயார்நிலையில் உள்ளதாக அறியவருகின்றது.
அவர்களின் 05 பேர் ஈ.பீ.ஆர்.எல்.எப். அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பதுடன், ஏனைய நால்வரும் புளொட் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாவர்.
முள்ளை வாய்க்காலில் இறுதிப் போர் நடந்த பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் அவர்களது சத்தியப் பிரமாண நிகழ்வினை நடாத்துவதற்காக ஆவன செய்யப்பட்டுவருவதாக யாழ்ப்பாணத்திலிருந்து அறியவருகின்றது.
ரெலோ அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
(கேஎப்)
1 comments :
உண்மையாக, தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில், நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலுள்ள உறுப்பினர்களை தெரிவு செய்ய விரும்பியதன் காரணமாகவே இந்த போலி வேடம்போட்ட கள்ளர்களுக்கும் வாய்ப்பு கிட்டியது.
இதுகளுக்கு படிப்பு, பண்பு, தராதரம், திறமை, அந்தஸ்து, அனுபவம் என்று ஒன்றுமில்லை,
எல்லோரும் அன்றைய தமிழீழ மாயாஜால இயக்கங்களிருந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி கொலை, கொள்ளை, களவு போன்ற கிரிமினல் வேலைகளை செய்து தங்களின் வயிற்றை வளர்த்து வந்த ஆசாமிகள்.
இப்படியான இவர்களுக்கு பதவிகள் கிடைத்ததே ஒரு பெரிய வரப்பிரசாரம். ஆனாலும், அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.
அதற்கு மாறாக, மீண்டும் தங்கள் மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி தங்களின் சுயநல வாழ்க்கைக்கு திட்டம் போடுறாங்கள்.
தமிழ் மக்களே, இதுகளை தேர்ந்தெடுத்தது எங்களின் பெரும் தவறு என்பது உண்மை..
இதுகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.
Post a Comment