பிரிட்டன் பிரான்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளி புயலில், இருவர் பலி: விமான சேவையும் ரத்து!
பிரிட்டன் மற்றும் பிரான்சை, "செயின்ட் ஜுட்' என்ற புயல் 160 கி.மீ., வேகத்தில் வீசியதால் லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய, 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் இந்த புயலில் சிக்கி இருவர் பலியாகியுள்னர்.
அது மட்டுமல்லாது ரயில் மற்றும் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் லண்டனின், தென் கிழக்கு பகுதியில், புயல்காற்றில் சிக்கி மரம் விழுந்ததிலயே இருவர் பலியாயினர்.
இந்த புயல்காற்றால் லண்டன் சாலைகளில் மரங்களும், மின் கம்பங்களும் விழுந்ததால் நேற்று காலை, நெரிசல் நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இந்த புயலால், பிரான்சும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment