Friday, October 25, 2013

வட மாகாண சபை கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது!

வட மாகாண சபைக்கான 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கட்டட திறப்பு விழாவில், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் நிதி ஒதுக் கீட்டில் சுகாதார தேவையுடைய 36 பேருக்கு சி.வி.விக்னேஸ்வரனால் காசோ லைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 51 பேருக்கு இந்த நிதி ஒதுக் கப்பட்டுள்ள நிலையில் 36 பேர் உத்தி யோகப்பூர்வ வைபவத்தில் அதை பெற்றுக் கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com