Friday, October 18, 2013

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

கலேவெல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல் நடத்தியுள்ளனர். தனது கடமைகளை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா ளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப் பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், தாக்குதல் தொடர்பில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த கலேவெல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com