Friday, October 18, 2013

மனைவி ஓடினாள். கணவன் நாடினான் நஞ்சை.

தன்னையும் குழந்தையையும் மனைவி கைவிட்டுச் சென்றதால் மனமுடைந்த ரத்மலையைச் சேர்ந்த 29 வயது நபர் தனது ஒன்ரறை வயது குழந்தைக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் நஞ்சருந்தியுள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குழந்தையின் நிலை நன்று என்றும் தந்தையின் நிலை கவலைக்கிடம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மேதால் காரணமாக மனைவி வீட்டைவிட்டு தூர சென்றுவிட்டார் என்று தெரிகிறது. மின்னேரிய பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com