Saturday, October 5, 2013

துப்பாக்கிச் சூடு தொடர்பில் அங்கஜன் தந்தை கைது - அன்று! மைத்திரி குணரத்னவின் தந்தை கைது - இன்று!

ஐதேக தலைவர் ரணில் விக்கிரசிங்கவை பதவி விலகுமாறு வலுயுறுத்தி ஐதேகவில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு மாகாண சபை உறுப்பினர்களான மைத்திரி குணரத்ன மற்றும் சிறிலால் லக்திலக்க தலைமையிலான குழுவும், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து மங்கள சமரவீர எம்பி தலைமையிலான குழுவும் இன்று மாத்தறையில் எதிரெதிராக ஊர்வலங்கள் நடத்தியபோது இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அடிதடி மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றின் விளைவாக தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் மைத்திரி குணரத்னவின் தந்தையாரான ஹேர்மன் குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ரணிலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஊர்வலத்தை நிறுத்துமாறு மாத்தறை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com