Sunday, October 20, 2013

அரசியல் யாப்பை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- கெஹலிய எச்சரிக்கை

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சி.வி. விக் னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்தவர் எனவே அவர் இலங்கையின் யாப்புக்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது நற்செய்தி எனவே இவர் அரச வேலைத் திட்டங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட முடியாது எனவே இதனை மதிக்காது செயற்பட்டால் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தவர் என்றும் பாராமல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com