Tuesday, October 29, 2013

கணவனை ஏமாற்றி மனைவியை வல்லுறவு புரிந்த காவலாளி கைது!

ஆராச்சிக்கட்டு - ஆடிப்பல பகுதியில் வேலை தேடிச் சென்ற 28 வயது குடும்பப் பெண்ணை ஏமாற்றி வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயது இளைஞரான தோட்டக் காலவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவருடன் வேலைத் தேடிச் சென்ற பெண்ணை வேலைத் தருவதாகக் காவலாளி கணவன் - மனைவியை அழைத்துச் சென்று போய் கணவரை வேறு வேலை ஒன்றுக்காக வெளியில் அனுப்பிவிட்டு காவலாளி பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கணவன் - மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் ஆன காவலாளியை சிலாபம் பொலிஸார் கைது செய்ததுடன் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com