Thursday, October 31, 2013

பிறந்த குழந்தையின் மூக்கிற்கு மேல் மூளை!

மண்டையோட்டுக்கு வெளியே மூளை காணப்படும் வகையில் பிறந்த குழந்தையின் மூளையானது, 6 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் மண்டையோட்டினுள் வெற்றிகரமாக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது சிட்னியில் இடம்பெற் றுள்ளது.

மேரி குண்ட்ரம் என்று அழைக்கப்படும் குழந்தையொன்று மூக்கிற்கு மேல் மூளைக் காணப்படும் வகையில் பிறந் துள்ளது. இக்குழந்தைக்கு இத்தகையதொரு பிரச்சினைக் காணப்படுவதை குழந்தையின் தாய் கர்ப்பம் தரித்து 5 ஆம் மாதத்தில் உணர்ந்துள்ளார்.

எனினும் குழந்தை கர்ப்பத்தில் இருப்பதால் எத்தகைய சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள முடியாது என்பதால், குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட அதற்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மண்டையோட்டுக்கு வெளியே மூளை காணப்படுவதால் அக்குழந்தை நோய் தொற்றுக்கு இழக்காகி உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் குழந்தை பிறந்து 7 மாதங்களில் அதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொஸ் டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வைத்தியர்கள் இச்சிகிச்சையை மேற்கொண் டுள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com