Wednesday, October 16, 2013

ஜனாதிபதி மகிந்தவை பாராட்டுகிறது சீன அரசு!

சீன மக்களின் அமைதி மற்றும் ஆயுதக் களைவுக்குமான அமைப்பின் (CPAPD) துணைத் தலைவியும் சீன மக்களின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் துணைத் தவிசாளருமான திருமதி யான் ஜுங்கி நேற்று (15) காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பார்க்கும் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருக்கிறதென்று அவர் ஜனாதிபதியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு வு ஜியாங்கோ, CPAPD இன் நிறைவேற்று துணைத் தலைவர் திரு மா வென்பு உள்ளிட்ட பல CPAPD அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் திரு லலித் வீரதுங்க மற்றும் திரு மிலிந்த மொரகொட ஆகியோர் இந்த சந்திப்பில் உடனிருந்திருக்கின்றனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com