Wednesday, October 16, 2013

ஹஜ்ஜைக் கொண்டாடுங்கள்.... மாடுகளை அறுக்காமல் மத ஒருமைப்பாட்டைப் பேணுங்கள்......

இன்றைய தினம் இஸ்லாமிய அன்பர்கள் கொண்டாடுகின்ற ஹஜ் பண்டிகையின் நிமித்தம் இன்று மாடுகளை அறுக்க வுள்ளதை நாம்அறிவோம். இஸ்லாமிய அன்பர்கள் அவ் வாறு மாடுகளை அறுக்காமல், அதிலிருந்து முற்று முழுதுமாக நீங்கி, அனைத்து மதங்களிடையேயும் ஒருமைப்பாட்டைப் பேணுங்கள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதத்திற்கும் தீங்கு விளைவிக்காத முறையில் நடந்துகொள்ள வேண்டியது அனைத்து மதங்களைச் சேர்ந்த அன்பர்களினதும் கடமையாகும் எனவும், மதங்களிடையே ஒருமைப்பாடு ஏற்படும்போது தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெளிவுறுத்தியுள்ளார்.

'இந்து மத அன்பர்களின் மிகவும் உன்னதமாக பூசைக்குரிய ஒரு பொருளாக மாடுகள் கருதப்படுவதாகவும், அதனைப் பாதுகாப்பது மிகவும் புண்ணிய கருமமாகும். முழு நாட்டையும் போசிக்கும் விவசாயத் தொழில்புரியும் விவசாயிகளின் வாழ்வியலுடன் தொடர்புடைய அவர்களுடைய வாழ்வாதாரமாகவுள்ள மாடுகளைப் பாதுகாப்பது தேவைப்பாடுடையதும் கடப்பாடுடையதும், அனைவரது பொறுப்புமாகும் எனவும் தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறியக் கொடுத்து, இவ்விடயத்தில் நீதியான முடிவொன்றைப் பெற்றுத் தருமாறும் தேரர் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

(கேஎப்)

11 comments :

Anonymous ,  October 16, 2013 at 3:22 PM  

இவரின் கருத்து சரியானது. எமது நாட்டில் பல மாதங்கள் இருப்பினும் புத்த மதமதத்தையுடையவர்களே அதிகமாக வாழுகிறார்கள். அத்துடன் இந்து மதத்தவரும் கணிசமான அளவு வாழுகின்றனர்.

அவர்கள் எல்லாம் மதத்திற்கு மட்டுமன்றி, கலாச்சாரரீதியிலும் மாடுகளை குறிப்பாக பசுக்களை ஒரு கடவுளின் சின்னமாகவே கருதுகின்றனர். எனவே அவர்கள் மாடுகளை கொல்வதை ஒரு குற்றமாக கருதுகிறார்கள்.

எனவே மற்றய மதத்தவரும் இந்நாட்டிலுள்ள பெருன்பான்மை மக்களின் வேண்டுகோள்களை மரியாதையின் நிமிர்த்தம் செவி மதிப்பதே சிறந்ததாகும்.

மாடு அறுப்பது எங்கள் கலாச்சாரம். இது எங்களின் உரிமை என்று வாதாடலாம்..
ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும்,
அதாவது, உலகிலுள்ள முஸ்லிம் நாடுகளில் எங்கேயாவது
வேறு மதத்தவர்கள் பன்றிக்களை அறுக்கிறார்களா?

இவ் விடயத்தை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையா.

hakeem2081 October 17, 2013 at 5:34 AM  

Srilankavil Panrikalai Arukirarkalea Athu Eslamiya Mathathil Saiyakkudathavai Ethaium Sinthikalamea

Anonymous ,  October 17, 2013 at 8:53 AM  

You should know the Rev Buddhist monks totally oppose all the killings.It can be animals or birds.There are many ways to feed the poor.We do respect every living beings.Be kind to mankind and all the creatures of the world.It is a creation of the God.

Anonymous ,  October 18, 2013 at 6:33 AM  

If it is in Saudi or any muslim country you can follow your way of living.This is a Buddhist country where the majority of people are Buddhists,so it is important to change your way of living accordingly.Try to live according to the circumstances.If not it may bring many difficulties.

சஃப்னா ,  October 19, 2013 at 6:56 AM  

அவரது கருத்து சரி என்று கூறும் Anonymous அவர்கலே, மாட்டை வணக்கத்திற்காக பயன்படுத்துவது இந்து மதத்தின் அடிப்படையில் எங்கும் இல்லை. அது ஒரு கூட்டம் தனக்கென வணக்கப்பொருளாக ஆக்கிக்கொண்டது. மேலும் அந்தக் கலாச்சாரம் இலங்கையில் காணப்படுவதும் இல்லை... ஏனெனில் சில கோயில்களில்கூட ஆடு மாடு போன்றவை பலியிடப்படுகின்றன. வணங்கப்படுவதாக இருந்தாலும் அதற்குப் போராடவேண்டியது இந்துக்களாகும். இந்த பிக்குகள் முட்டாள்தனமாக இனவாதத்தை தூண்டுவதற்கு இப்படி ஒரு ஆயுதததை கையிலெடுத்துள்ளார்கள். தனது மதத்தின் அடிப்படைகள் அரசாங்க அங்கீகாரத்துடன் சிதைக்கப்படுவதயும் பொருட்படுத்தாமல் மற்ற மதத்திற்காக போராடுகிறோம் என்று பிரச்சாரம் செய்யும் இவர்களது சூசகம் முட்டாளல்லாத எல்லோருக்கும் புரியும்.

Anonymous ,  October 20, 2013 at 8:23 PM  

We do respect every living being because they are the creation of our
loving GOD.We see the God in every living being.There are many ways to feed the poor

Anonymous ,  October 21, 2013 at 7:55 AM  

By killing brutally an animal and giving its meat to a poor is something that we totally hate.It is totally a sin.

Anonymous ,  October 21, 2013 at 9:33 AM  

Learn to be kind to every living being

Anonymous ,  October 21, 2013 at 11:09 AM  

Akmeemana Rev.Dayaratne monk is the
saviour of the living creatures of the present century.may His fame spread all over the world.May God bless him.

Anonymous ,  October 22, 2013 at 10:01 AM  

பல்லின சமூகம் வாழும் ஒரு மண்ணில் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பதும், மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றாகும்.பேரினவாத அரசுயல் இன்று இனங்களை மோதவிட்டு அரசியல் லாபமீட்டிக்கொன்றுக்கும் இவ்வேளையில் மதவாதிகள் சூலலறிவுடன் நடந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு சிந்திப்பது மதவிரோதமல்ல. மத உரிமை என்பது மனித உரிமை என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்வது ஒன்றும் இறைவனுக்கு எதிரானதல்ல.மாட்டை புனித விலங்காகக் கருதும் மக்கள் சமூகம் வாழும் ஒரு மண்ணில் இதைத்தான் நான் செய்வேன்.மாட்டுக்கு மாற்றீடாக எவ்வளவோ நல்ல சமூகத்திட்டம்களை நாம் செய்யலாம் என்பதை மதவெறியர்கள் அறிவார்களா?

Anonymous ,  October 22, 2013 at 11:16 AM  

We do believe that they enjoy the killing and suffering of the animal
till it has the last breath and not for anything else.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com