Saturday, October 19, 2013

தொல்பொருளும் கோட்டாபயவுக்குப் போகவேண்டும் - பிபிஎஸ்

எமது பாரம்பரியத்தைக் காப்பாற்றும் திறமை தொல்பொரு ளியல் திணைக்களத்துக்குக் கிடையாது. அந்த திணைக்கள த்தில் சில மோசடிப் பேர்வழிகள் இருக்கிறார்கள். புதையல் வேட்டைக்காரர்களுக்கு அவர்கள் துப்பு கொடுக்கிறார்கள். எனவே பாதுகாப்பு அமைச்சு அந்த திணைக்களத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறி யுள்ளார்.

புதையல் வேட்டைக்காரர் பொலந்நறுவையில் உள்ள சுகலதேவி கல்லறையை சிதைத்தது சம்பந்தமாக சமீபத்தில் வெளியான அறிக்கைகள் பற்றி ஊடகவிய லாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com