Wednesday, October 23, 2013

சிறைச்சாலை கட்டளை சட்டம் தொடர்பான குழு அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

சிறைச்சாலை கட்டளை சட்டம் தொடர்பான குழு அறிக்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கும் நிகழ்வு நீதி அமைச்சில் இடம்பெற்றது. சட்டத்தரணி ஹெக்டர் யாப்பா தலைமையிலான குழு ஆய்வுகளை தொடர்ந்து அறிக்கை சமர்பித்துள்ளது.

125 வருடகால பழைய சிறைச்சாலை கட்டளை சட்டம் தற்காலத்திற்கு பொருத்தமானவாறு மறுசீரமைக்கப்பட வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. சிறையில் தடுத்து வைக்கப்படுவோர்கள் குறுகிய காலத்ததிற்குள் நற்பிரஜைகளாக சமூகத்தில் இணைக்கும் நோக்கினை மேற்கொள்ள கூடியவாறு சட்ட மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com