Thursday, October 31, 2013

இலங்கையை விட்டு வெளியேற மாலைத்தீவு பிரஜைக்கு தடை!

குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரியையடுத்து மாலைதீவு பிரஜையொருவருக்கு இலங்கையை விட்டு வெளியேற கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரவு விடுதியொன்றில் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஏமாற்றியமை தொடர்பிலேயே மாலைத்தீவு பிரஜைக்கு இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இது தொடர்பான பணிப்புரை வழங் கப்பட்டுள்ளது. மாலைத்தீவு பிரஜை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான, போலிப்பயணிகள் காசோலையை, சூதாட்ட நிலையத்திற்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான சூதாட்ட நிறுவனத்தின் காசாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவானிடம் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபரை நாட்டை விட்டு வெளியோத விதத்தில் கட்டளை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கமையே நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com