Saturday, October 19, 2013

காமச்சாமி ஆசாராமிடம் சிக்கிய இளம் பெண்ணின் அதிர்ச்சி தரும் தகவல்! ஆசாராமை பற்றிய அதிர்ச்சித்தகவல்கள்!

குஜராத்தை சேர்ந்த 72 வயதான ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்னும் இடத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். சர்சைக்குரிய குறி த்த சாமியார் ஆசாராமுக்கு தினசரி பெண்கள் வேண்டும். அதுவும் புதுப் புதுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று புது தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஆசாரம் பாபு பற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசாராமால் பாலியல் பலாத்காரத் துக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்துள்ளார். இவர் ஆசாராம் மீதும், அவரது மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்காரப் புகார் கூறியுள்ளார். மேலும் இவரது சகோதரியும் இவர்களால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசாராமுக்கு இளம் பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் அவர் இளம் பெண்களைத்தான் தேடுவார். தினசரி அவருக்குப் புதிது புதிதாக பெண்கள் வேண்டும். ஒரே பெண்ணை அவர் மீண்டும் மீண்டும் விரும்ப மாட்டார். தினசரி பெண்கள் கேட்பார். இளம் பெண்களை தனது சபலத்திற்கு வீழ்த்த அவர் பல தந்திரங்களைக் கடைப்பிடிப்பார். இதற்காக அவர் பல செயல்களையும் கச்சிதமாக செய்வார்.

நான் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளேன். 1998ம் ஆண்டு சூரத்தில் நடந்த ஆன்மீகக் கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அங்கு எனக்கு ஆசாராம் ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்தார். ஆப்பிளும் கொடுத்தார். பின்னர் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார், என்னை வந்து சந்தி என்று கூறிச் சென்றார்.

பின்னர் நான் ஆசாராமின் ஆன்மீக முகாமில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு என்னை அணுகிய அவரது பக்தர்கள் சிலர், இந்த ஆப்பிள் விசேஷமானது, இதை யாருக்கும் தராதே, நீயே சாப்பிடு என்றனர். அப்போது தேல் என்ற பிரசாகர் என்னிடம், உன்னை ஆசிரமத்தின் சிறப்புப் போதனையாளராக்க ஆசாராம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் சூரத்தில் நடந்த இன்னொரு கூட்டத்தில் நானும் எனது தாயாரும் கலந்து கொண்டோம். அப்போது ஆசாராமின் மேலாளரான துருவ் என்பவர் என்னை, ஆசாராமின் மனைவி லட்சுமியிடம் அழைத்துச் சென்றார். லட்சுமி, என்னையும், எனது தாயாரையும் ஊருக்குப் போக வேண்டாம் என்று கூறி தடுத்து நிறுத்தினார். பின்னர் என்னை மட்டும் அகமதாபாத்துக்கு அழைத்துச் செல்லப் பணித்தார். நான் அங்கு கொண்டு செல்லப்பட்டேன்.

2001ம் ஆண்டு தேல் மற்றும் வக்லோ ஆகிய இருவரும் என்னையும், என்னைப் போல 10 இளம் பெண்களையும் ஆசாராமின் பண்ணை இல்லமான சாந்தி வாதிகாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னையும் இன்னொரு பெண்ணையும் தேர்வு செய்த ஆசாராம், எங்களை போதனையாளர்களாக்குவதாக அறிவித்தார். மேலும் பயிற்சியும் அளிக்கப் போவதாக தெரிவித்தார்.

பின்னர் ஆசாராமின் மகள் பார்தி ஒரு நாள் எங்களிடம் வந்து, என்னையும், இன்னொரு பெண்ணையும் ஆசாராம் தனது பண்ணை இல்லத்துக்கு அழைப்பதாக கூட்டிச் சென்றார். அங்கு எங்களை ஒவ்வொருவராக அறைக்குள் வருமாறு ஆசாராம் கூறினார். முதலில் அந்தப் பெண் சென்றார். 10 நிமிடம் கழித்துத் திரும்பினார். பின்னர் என்னை வரச் சொன்னார்.

நான் உள்ளே போனபோது படுக்கையில் உட்கார்ந்திருந்தார் அவர் உள்ளே வந்த என்னிடம் நெய்யைக் கொடுத்து தலையில் தடவி மசாஜ் செய்யுமாறு கூறினார். நான் மசாஜ் செய்ய ஆரம்பித்தபோது அவர் எனது உடலில் கை வைத்து விளையாடத் தொடங்கினார். இதை நான் விரும்பவில்லை. இப்படிச் செய்யாதீர்கள் என்று ஆசாராமிடம் நான் கூறினேன். அதற்கு அவர், நீ ஒரு பெரும் போதனையாளராக வரப் போகிறாய். அதற்கு முன்பு இந்த சாதாரண லௌகீக வாழ்க்கையிலிருந்து நீ விடுபடவேண்டும் என்றார்.

அதைக் கேட்டு நான் மேலும் பயந்தேன். என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். அதற்கு கோபமடைந்தார் அவர் என்னை படுக்கையில் முரட்டுத்தனமாக தள்ளினார். பின்னர் எனது சல்வாரைப் பிடித்து இழுத்துக் கிழித்தார். நான் தப்பி ஓட முயன்றேன். ஆனால் என்னைப் பின்னாலிருந்து பிடித்து படுக்கையில் தள்ளினார்.

பின்னர் என்னிடம், நீ எவ்வளவுதான் தப்பி ஓட முயன்றாலும் உன்னை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று கூறி என்னை ஓரல் செக்ஸில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். பின்னர் அவரே அதைச் செய்ய வைத்தார். எனக்கு ரத்தம் வந்தது. மிகுந்த வலியில் கதறி அழுதேன். அப்படியும் அவர் என்னை விடவில்லை. எனது வெள்ளை நிற குர்தா முழுவதும் ரத்தமாக இருந்தது. என்னை பாத்ரூமுக்குப் போய் சுத்தப்படுத்திக் கொள்ளக் கூறினார்.

பாத்ரூமிலிருந்து நான் திரும்பி வந்ததும் என்னைப் பார்த்து இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லாதே. சொன்னாலும் உனக்குப் பலன் இருக்காது. நீ சொன்னால் உன்னை எரித்து சாம்பலைக் கடலில் கரைத்து விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார்.நான் அறையிலிருந்து வெளியே வந்தபோது கேட் அருகில் தேலும், வக்லோவும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். என்னைப் பார்த்து கிண்டலடித்தனர்.

பிறகு சிறிது காலம் நான் ஆசிரமத்தில் போதனையாளராக இருந்தேன். அப்போதுதான் ஆசாராமின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டேன். அவருக்கு விதம் விதமான பெண்கள், இளம் பெண்கள், புதுப் பெண்கள் தேவை என்பதை உணர்ந்தேன். ஆனால் பல பெண்களை அவர் அனுபவித்த போதும் என்னையும் சித்திரவதை செய்ய அவர் தவறியதில்லை. தொடர்ந்து சித்திரவதைக்குள்ளானேன்.

அங்கிருந்து தப்ப சமயம் பார்த்துக் காத்திருந்தேன். என்னைப் போலவே மன வேதனையில் இருந்த இன்னொரு பெண்ணும், நானும் 2007ம் ஆண்டு அங்கிருந்து தப்பி வந்தோம். பின்னர் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று அப்பெண் கூறியுள்ளார்.

இரு சூரத் சகோதரிகளும், ஆசாராம் மனைவி லட்சுமி மற்றும் மகள் பார்தி ஆகியோர் மீதும் புகார் கொடுத்துள்ளதால் அவர்கள் இருவரும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்.

இதேவேளை ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அவரது புகாரின் பேரில் ஆசாராம் மீது பொலிஸார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஒரு நாள் பொலிஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பொலிஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் ஜோத்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி ஆசாராம் சார்பில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆசாராமின் உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆசாராமை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதாடினார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, ஆசாராமின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை கற்பழித்து விட்டதாக அக்கா- தங்கை இருவர் இவர்கள் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சந்த்கேடா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை தங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என குஜராத் மாநில பொலிஸார் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் பொலிஸ் துணை கமிஷனர் மனோஜ் நினாமா தலைமையிலான பொலிஸார் ஆசாராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர். அவரை 4 நாட்கள் பொலிஸார் காவலில் வைத்து விசாரிக்க காந்திநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 15-ம் தேதி அனுமதி அளித்தது.

விசாரணையில் ஒருகட்டமாக ஆசாராம் பாபுவின் ஆண்மை தன்மையை உறுதிபடுத்துவதற்காக கடந்த 16-ம் திகதி அவரை உள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக பொலீசார் அழைத்து சென்றனர். மருத்துவ டாக்டர்களிடம் ஆண்மை பரிசோதனைக்கு தன்னால் ஒத்துழைக்க முடியாது என ஆசாராம் பாபு பிடிவாதம் பிடித்ததால் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு பரிசோதனை நடத்தாமலேயே பொலிஸார் அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு இன்று மீண்டும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பரிசோதனை முடிவில் 72 வயதாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநில நீதிமன்ற நடைபெற்று வரும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதும், அவர் முழு ஆண்மை தன்மையுடன் உள்ளார் என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டதும் நினைவிருக்கலாம்.

3 comments :

Anonymous ,  October 19, 2013 at 11:19 AM  

Inthak kilawan pundaiyandiyin kottaiyai irumbu shoodu poattu aids irukkum pundai onril amukka weyndum.

மூர்த்தி ,  October 19, 2013 at 1:20 PM  

இத்தனை அகோரமும் இந்தியாவில் இருக்கும்போது ஏன் இந்த தமிழ் நாட்டு ஆசாமிகள் இலங்கை விடயத்தை பார்கிறானுகள்

Anonymous ,  October 24, 2013 at 9:56 PM  

Vadakkaththai naaiykal, penkalai kadichchu kutharukindra naaikal endru ulaka makkalukku nallavae theriyum. Uvankala pettathukalum, uthai vida pisaasukalukku pirathathu aaka thaan irukkum.

seemanum appadiththanae puli pennai pichchu eduththuppottu,thanda inaththu vadakkaththaikku pidikkiraan. Athe inam thaan kasi aananthanum.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com