Tuesday, October 29, 2013

வவுனியாவில் வேகமாக வந்த அம்புலன்ஸ் சைக்கிளில் சென்ற முதியவரை மோதித்தள்ளியது

வேகமாக வந்த அம்புலன்ஸ் வண்டி மோதித் தள்ளியதில் வயோதிபர் ஒருவர் பலியான சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இன்று (29)மாலை இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஓமந்தை பரசன்குளத்தை சேர்ந்த செ. சுவர்ணலிங்கம் (வயது 72) என்பவர் பலியாகியுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மல்லாவி வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வேகமாக வந்த அம்புலன்ஸ் வண்டியே துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபரை மோதித்தள்ளியது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com