Thursday, October 3, 2013

இத்தாலியில் படகு மூழ்கியதில் 62 பேர் உயிரிழப்பு மேலும் பலரை காணவில்லை!

தெற்கு இத்தாலி கடற்பரப்புக்கு அப்பால் சட்டவிரோத குடிவரவாளர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த படகு ஒன்று இன்று மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இவர்களில் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 இற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் படகில் 500 பேர் வரையில் இருந்துள்ளதாகவும் நம்பப்படுவதுடன் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுபிள்ளையும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் அடங்குவதுடன் படகு விபத்திற்குள்ளானபோது படகிலிருந்த பயணிகள் கடலினுள் பாய்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் இந்தப் படகு மூழ்குவதற்கு முன்னராக படகு தீ பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com