Thursday, October 3, 2013

பாடசாலை ஜூடோ அறையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட 5 ஜோடி மாணவர்கள்!

கண்டி மாவட்டத்துக்கு அடுத்த மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஒரு பாடசாலை ஒன்று மாகாணசபைத் தேர்லுக்காக மூடப்பட்ட பின்னர் தேர்தலுக்கு முதல் நாள் அந்த குறிப்பிட்ட பாடசாலையில் இந்தவருடம் க. பொ.த. (சா.த)தோற்றவுள்ள ஐந்து காதல் ஜோடிகள் அதன் ஜூடொ பயிற்சி அறையைக் கள்ளத்தனமாகத் திறந்து அங்கு உள்ள மெத்தைகளில் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த கிராமசேவை அலுவலர்கள் படுப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெத்தைகளைத் தேடி செல்லும் போது ஜூடோ அறையுக்குள் இருக்குமோ என திறந்தபோது இவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் ஒரு மாணவி ஓட முடியாது பிடிபட்டுவிட்டாள் இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே அந்த பத்து பேரும் பிடிபட்டதுடன் பாடசாலை நிருவாகம் இந்த 10 மாணவரையும் பாடசாலையில் இருந்து விலக்க நேரிட்டுள்ளது.

குறிப்பிட்ட பத்து மாணவர்களும் படிப்பில் மிகக் கெட்டிக்காரர்கள் என்று கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com