Thursday, October 17, 2013

விமானம் ஆற்றில் மூழ்கி அனர்த்தம்! 49 பயணிகள் பலி!

தென்கிழக்கு ஆசிய நாடான லாவொஸ் நாட்டு விமான மொன்று வானிலை காரணமாக ஆற்றில் விழுந்து மூழ் கியதில், 11 நாடுகளைச் சேர்ந்த 49 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான லாவோ ஸில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணி களுடன் புறப்பட்டது.

லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், விமானம் திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்தக் கொடூர விபத்தில் சிக்கி, 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆற்றிலிருந்து சடலங்களை மீட்க உள்ளூர் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளின் உதவியை மீட்பு குழுவினர் நாடியுள்ளனர். மேகாங் ஆற்றில் மூழ்கிய விமானத்தை இன்னும் கண்டறிய இயலவில்லை என்பதும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சுமார் 20 கி.மீ தூரம் வரையிலும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com