Monday, October 21, 2013

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித்தேர்தல்!

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையுள்ள காலப்பகுதியில் மூன்று தேர்தல்களை நடத்து வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுவ துடன், இந்த தேர்தல்களை எந்தெந்த காலங்களில் நடத்துவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் தயாரித்த அட்டவணைக்கு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் அங்கீகரித்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் இவ்விரு மாகாணங்களும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது ஊவா மாகாண சபையை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் கலைத்து ஒக்டோபர் மாதத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடாத்த திர்மானித்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com