Saturday, October 12, 2013

இத்தாலி நோக்கி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலி!

இத்தாலியில் குடியேற சென்ற 150 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு எதிர்பாராத விதமாக வீசிய சூறைக்காற்றில் தடுமாறிய படகு சிசிலி கடற்பகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற வழியாக ரோந்து படகில் சென்ற இத்தாலிய வீரர்கள் அளித்த தகவலின் பேரில் படகுகளிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்து மீட்புபடையினர் சுமார் 100 பேரை மீட்டதுடன்
12 குழந்தைகள் உள்பட 50இற்க்கும் மேற்பட்ட சடலங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இதனை விட காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் தற்போதும் மும்முரமாக நடைபெற்று வருகிறன.

இதே போன்றுதான் கடந்த வாரமும் லிபியாவில் இருந்து இத்தாலியில் கள்ளத்தனமாக குடியேற முயன்றவர்கள் வந்த படகு லம்படுசா தீவின் அருகே கவிழ்ந்த விபத்தில் 300 இற்க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com