Friday, September 20, 2013

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு - யு.எம்.இஸ்ஹாக்

கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை மாலை இன்று நடை பெற்றது. பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 03 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் முதலிய கிரியைகளுடன் ஆரம்பமானது.

மகாபாரதக் கதையினை நினைவு கூரும் முகமாக 18 தினங்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவத்தில் புதன் கிழமை பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் இடம் பெற்று வியாழக்கிழமை அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை அரவாணை களப்பலிகொடுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்று

இன்று மாலை ஆலய முன்றலில் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதை மற்றும் தேவாதிகள் சகிதம் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடை பெற்றது . இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நாளை சனிக்கிழமை தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.

















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com