Thursday, September 5, 2013

என்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிகாரிக்கு புலனாய்வு அதிகாரியை அறிமுகம் செய்து வைத்த மாவையின் மறுமுகம்!

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கைத் தமிரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராசா எம்.பி. தமிழ் இனத்தை விற்றுப் பிழைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று கூறியிருக்கின்றார்.

டக்ளஸ் தமிழ் மக்களை விற்றுப்பிளைக்கின்றாரா , தனது சகோதரன் பெயரில் கோடிக்கணக்கான பணம் சேர்க்கின்றாரா, வட மாகாண சபையின் முதலமைச்சராவதுதான் எனது கனவு எனச் சொல்லிக்கொண்டிருந்தவர் ஏன் கனவைக் கலைத்துக்கொண்டார் என்பதை எல்லாம் ஆராய்வதற்கு முன்னர் ஏதோ டக்ளஸ் மட்டும்தான் தமிழ்மக்களின் அரசியலை வியாபாராமாக்கி இருக்கின்றார் என்று சொல்வதற்கு , பிறந்ததிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை பிச்சைக்காரன் கைப் புண் பாணியில் வைத்துக்கொண்டு அதில் மட்டுமே - வாழ்க்கைப் பிழைப்பை நடத்திவரும் மாவை சேனாதிராசா தகுதியுடையவரா என்பது தொடர்பான முடிவினை மக்கள் எடுப்பதற்கு புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு மூலகாரணிகளில் ஒருவராக இருந்த மாவையின் மறுபக்கத்திற்கு வாருங்கள்.

1995 இல் யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது யாழில் இருந்து மாவையை சந்திக்க அவரது நண்பர் ஒருவர் மாவையின் கொழும்பு உல்லாச விடுதிக்கு வந்திருந்தார்.

அவர் ஒரு அரச சிவில் நிர்வாக அதிகாரி. அவரிடம் இருந்து யாழ் நிலவரங்கள் குறித்து மாவை விசாரிக்க தொடங்கினார்.

புலிகளோடு யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்?...
யார் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்?..
அவர்களது பெயர் விபரங்கள் என்ன?.....

இவைதான் மாவை அந்த நபரிடம் கேட்ட கேள்விகள்.

விபரங்களை தெரிந்து கொண்ட மாவை தனக்கு தகவல் சொன்ன அந்த நபரை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தி தனக்கு சொன்ன தகவல்கள் அனைத்தையும் அவருக்கும் சொல்லுமாறு உத்தரவிட்டார். யாழில் இருந்து வந்த அந்த நபர் மாவையின் உத்தரவை ஏற்று யாழில் உள்ள நிலவரங்களையும் புலிகளுக்கு ஆதரவான சிவில் நிர்வாக தமிழ் அதிகாரிகளின் பெயர் விபரங்களையும் மாவை அறிமுகப்படுத்தியவருக்கு விலாவாரியாக எடுத்து சொல்லி விட்டார்.

இறுதியில் மாவை அறிமுகப்படுத்திய அந்த நபர் யாழில் இருந்து வந்த அந்த நபரிடம் தனது தொடர்பு முகவரியை கொடுத்து அடிக்கடி தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டிருந்தார்.

யாழ் நபர் அதிர்ந்து போய்விட்டார். தான் தகவல் கொடுத்த நபர் ஒரு இராணுவ புலனாய்வு அதிகாரி என்பதை தெரிந்து கொண்ட யாழ் நபருக்கு மாவையின் மீது வெறுப்பு உருவாகிவிட்டது.

தமிழர்களை இராணுவ புலனாய்வாரள்களுக்கு காட்டி கொடுக்கும் மாவை சேனாதிராஐhவா தமிழ் மக்களின் பிரதிநிதி என்று கோவம் கொண்ட அந்த யாழ் நபர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் சிலவற்றிற்கு தனது பெயரை வெளிப்படுத்தாமல் இந்த விபரங்களை தெரிவித்திருந்தார்.

அப்போது ஊடங்கள் சிலதில் அந்த செய்தி வெளிவந்த போது அதிர்ந்து போய் மௌனித்தார் மாவை.

தமிழினத்தை விற்றுப்பிழைப்பர்கள் என அடுத்தவர்களை நோக்கி சுட்டு விரல் நீட்டும் மாவைக்கு இதுவே அறிமுக விளக்கம்.

மாவை எழுபதுகளில் தமிழ் இளைஞர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டவர். ஏனைய பல டசின் தமிழ் இளைஞர்களோடு கைதுசெய்யப்பட்டு சிறை சென்றார் என்பவை எல்லாம் உண்மைதான்.

ஆனால் அதனை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு இதுவரை அரசியல் பிழைப்பு நடத்திவரும் மாவை சேனாதிராஜா தமிழினத்துக்குப் புரிந்த நன்மைகள் என்ன?

அரசியல் தலைமையின் பேரில் தமது வயிற்றுப் பிழைப்பை நடத்தியமை தவிர...

எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் தமிழரசுக்கட்சியில் மாதாந்தச் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர் அவர். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணன் அமிர்தலிங்கத்துடன் ஒட்டிக்கொண்டு, அவரின் உதவியாளராக இருந்தவர் போல் நடித்துக்கொண்டு, அவருக்கே ஆப்பு வைத்தவர்.

மாவை சேனாதிராசா இளைஞராக இருந்துகொண்டு அண்ணன் அமிரின் குடும்ப வாழ்க்கைக்கு வைத்த ஆப்பு அந்தக் காலத்தில் சந்தி சிரித்த கதை. தனிப்பட்ட ஒழுக்க வாழ்வில் கறைபடிந்த அந்தக் கேவலத்தைப் பேசுவது நாகரீகமல்ல.

அமிர் அண்ணனுக்கு உதவியாளராக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் அவருக்கு வந்த பெருந்தொகையான பெறுமதி மிக்க மணி ஓடர்களைச் சுருட்டி அமிர் அண்ணனுக்குத் தெரியாமல் மாற்றி, பணமாக்கி, அவற்றைக் கபளீகரம் செய்து, ஏப்பமிட்டவர்தான் மாவை. அது நன்கு தெரிந்திருந்தும் கூட அதனைப் பொறுத்துக் கொண்டார் அண்ணர் அமிர். இந்தக் கறைகள் எல்லாம் அமிர் அண்ணனுடன் மறைந்துவிட்டன என்று நினைத்து மாவை இப்போது பிறர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் என்று குற்றம் சுமத்த முனைகின்றார். ஆனால் அமிர் அண்ணனுடன் நன்கு பழகிய, வயதில் மூத்த தலைவர்கள் பலர் இன்றும் தமிழரசுக் கட்சியில் இருக்கின்றார்கள், இந்த உண்மைகளைப் புட்டு வைக்கும் விருப்பத்தில் அவர்கள் உள்ளனர் என்பதை மாவையர் மறந்துவிடக்கூடாது.

1985, 86 வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மாதச் சம்பளத்துக்குப் பார்த்த வேலையைத் தவிர தமது வாழ்நாளில் அவர் வேறு எங்காவது வருமானம் தரும் வேறு பிழைப்புக்களை நடத்தியிருக்கின்றாரா? அவரது காணி, பூமி எல்லாம் வலி. வடக்குப் பகுதிக்குள் சிக்குப்பட்டுள்ளன. இன்று வரை அவற்றை விற்றுப் பணமாக்கக் கூட அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

அப்படியானால் இதுவரை கொழும்பில் தாம் வாழ்ந்துகொண்டு, சமாந்தரமாக குடும்பத்தை திருச்சியில் பேணிக்கொண்டு, வெளிநாடுகளுக்குத் தமது பிள்ளைகளை அனுப்பவும் இந்தியாவில் மருத்துவத்துறையில் மகளைப் படிப்பிக்கவும், தாராளமாகச் செலவு செய்யவும் மாவைக்கு இதுவரை காலமும் பணம் எங்கிருந்து வந்தது?

இலங்கைத் தமிழர் அரசியலை வைத்து நடத்திய பிழைப்பில்தானே அவருக்கு இதுவரை வருமானம் வந்தது....! அவர் தமிழ் இனத்தை வைத்து வேறுயாரோ அரசியல் பிழைப்பு நடத்துவது பற்றிப் பேசுகின்றார். அவருக்கு அதற்கு அருகதை உண்டா...?

அமிர்தலிங்கம் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதே கட்டடத்தில், பக்கத்தில் இருந்த இவர் எப்படித் தப்பிப் பிழைத்தார் என்பதும், அதற்குள் புதைந்து கிடக்கும் விடயங்களும் சிதம்பர இரகசியங்கள்....!

ஆனால் அமிர் அண்ணர் சுட்டுக்கொல்லப்பட்ட கையோடு அந்த எம்.பி. பதவி தமக்கு வேண்டும் என்று அடம்பிடித்து அதிலே சாதித்தவர். அதற்கு சாட்சியம் கூற ஆனந்தசங்கரி ஐயா இன்றும் உயிருடன் இருக்கின்றார் என்பதை மாவை மறந்துவிடக்கூடாது.

நான்கு, ஐந்து தடவைகளுக்கு மேல் எம்.பி பதவிமூலம் கிடைத்த ஷபஜிரோ| வாகனங்களை விற்றுப் பிழைத்து நான்கு, ஐந்து கோடி ரூபா சுருட்டியாகிவிட்டது.

தமது எம்.பி. பதவியையே மூலதனமாக வைத்துக்கொண்டு இந்திய விஸா பெறுவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி விஸா பெற்றுக்கொடுத்து பெரும்தொகைப் பணம் கறந்து ஏப்பமிட்டு வந்தவர் மாவை.

கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்தலுக்காக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வாரி எடுத்த பலகோடி ரூபா பெறுமதியான தேர்தல் நிதியை சம்பந்தர், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோருடன் சேர்ந்து யாருக்கும் கணக்குக்காட்டாமல் கொள்ளையடித்த கதைகள் ஏராளம்.

யாழ்.குடாநாட்டை இராணுவம் மீண்டும் கைப்பற்றி மின்சார வசதி ஏற்படுத்தியபோது, இந்தியாவின் ஷகிரிலொக்ஸ்கர்| கம்பனியின் ஜெனரேற்றரை இலங்கை அரசுக்கு வாங்குவதற்குத் தரகராக அரசுக்கும் அந்தக் கம்பனிக்கும் இடையில் செயற்பட்டு பல மில்லியன்கள் கொள்ளையடித்தார் மாவை.

அமைச்சர் பஸிலுக்கும் தமக்கும் இருந்த கள்ள உறவை வைத்து இந்த வேலையைக் கனகச்சிதமாக முடித்துக்கொடுத்ததற்கான தரகுப் பணம் மட்டுமல்லாமல், தமது மகனுக்கு அந்த நிறுவனத்தின் பெங்களுர் அலுவலகத்தில் காத்திரமான வேலையை அவர் பெற்றுக்கொடுத்ததும் கூட ஷஅரசியல் பிழைப்பு வியாபாரம்தான்| என்பதை அவர் ஒரு கணம் சிந்திந்துப் பார்க்கவேண்டும்.

தமிழகத்தின் தி.மு.கழக எம்.பியான பாலு, சேது சமுத்திரத் திட்டத்துக்குப் பொறுப்பான மத்திய கப்பல்துறை அமைச்சராக இருந்தபோது இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அவருடன் அவசரமாகச் சந்தித்து அங்கு தாம் பேசியது என்ன என்பதை மாவை ஒரு தடவை நினைத்துப் பார்ப்பது நல்லது.

துறைமுக அதிகார சபை விருந்தினர் விடுதியில் சேதுசமுத்திரத் திட்டப் பொதுமுகாமையாளர் ரகுபதியுடன் அவர் பேசி முடிவெடுத்தது என்ன? தமது உறவினர்களுடன் தொடர்புடைய டென்மார்க் நிறுவனம் ஒன்றுக்கு சேதுசமுத்திர அகலிப்புப் பணிக்கான பலகோடி ரூபா ஒப்பந்தத்தை ஒடுங்குபடுத்திக் கொடுத்து, அதற்கான பலகோடி ரூபா பணத்தை தரகர் கட்டணமாக அறவிட்டுக்கொண்டமைதான்.

தற்போதைய தேர்தல் உட்பட அண்மைக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களுக்கு உதவிப் பணம் என்று இந்தியத் தரப்பிடமிருந்தும் பிற உதவியாளர்களிடமிருந்தும் மாவையும், சம்பந்தரும், சுரேஷும் சுருட்டிய பலகோடி ரூபா பணத்தில் முக்கால் பகுதி இவர்களின் பொக்கட்டுக்குள் போனதுதானே நடந்த கதை....!

இன்றும் கூட இந்தத் தேர்தலில் முக்கியத்துவமும் பிரபலமும் மிக்க சில நபர்களுக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்காமல் பின் கதவால் பலரிடம் இருந்தும் பல மில்லியன் ரூபா பணத்தை அவர் மடக்கிக்கொண்டார் என்றும், வேறு சிலருக்கு நியமனம் கொடுக்க பல மில்லியன் ரூபா பணத்தை அவர் தமது எடுபிடிகள் மூலம் அறவிட்டுக்கொண்டார் என்பதும் வெளிவராத இரகசியங்கள். காலம் வரும்போது வெளிச்சத்துக்கு வரும் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்குப் பொறுப்பானவர் மன்னாரைச் சேர்ந்த சிவகரன்;. அவர் இந்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

அவர் கட்சியின் உள் கூட்டங்களின் ஓடியோ, வீடியோ பதிவுகள் அடங்கிய ஷசிப்|புகளை தூக்கிக் காட்டி ஷஷஎல்லாம் பதிவில் இருக்கின்ற|| என்று குறிப்பிட்டு ஆக்ரோஷமாகப் பேசினால் மாவை பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகின்றார் எனக் கட்சிக் காரர்களே ஆச்சரியத்துடன் கூறுகின்றார்கள்.

சிவகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்ததும், மன்னாரில் சிவகரன் உட்பட அந்த இளைஞர் காட்டியவர்களுக்கு மட்டுமே இந்தத் தடவை தேர்தல் வேட்பாளர் நியமனம் வழங்கியமையும், யாழ். எம்.பியும் ஷஉதயன்| உரிமையாளருமான சரவணபவனுக்கே அல்வா கொடுத்துவிட்டுப் போன சுகிர்தன் என்ற இளைஞருக்கு சரவணபவனின் கடும் எதிர்ப்பையும் மீறி சிவகரனின் அழுத்தம் காரணமாக இந்தத் தேர்தலில் யாழ்.மாவட்ட வேட்பாளர் நியமனம் கொடுத்ததும், மத்தியில் மச்சான் மாநிலத்தில் நான் என முதலமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் பணத்தை சப்ரா நிறுவனத்தினூடாக சுருட்டிய ஊடடக விபச்சாரி வித்தியாதரனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவது போல இறுதிவரைக்கும் காட்டிக்கொண்டு சிவகரனின் அழுத்தம் காரணமாக கடைசிநேரத்தில் வெட்டிவிட்டதும் இந்தகைய இரகசியங்களின் பின்புலத்தில் அரங்கேறிய ஆச்சரியமான விடயங்கள்தான் என தமிழரசுக் கட்சிக்குள் அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது.

மன்னாரில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களுக்காக அங்கு செல்லும் மாவை, சிவகரன் ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் இடங்களில்தான் தங்குவது வழமை. அப்படித் தங்கும் போது நடந்த விபரீதம் ஒன்றைப் பதிவு செய்து வைத்துக்கொண்டுதான் சிவகரன் இப்படி அச்சுறுத்தல் அரசியல் நடத்துகின்றார் என்றும் தமது பெயர், அரசியல் எதிர்காலம் எல்லாம் அடிபட்டுப் போகும் என்பதால் வேறு வழியின்றி சிவகரனின் ஆட்டத்துக்கெல்லாம் மாவை அடங்கிப் போகிறார் என்றும் கூறப்படுகின்றது.

இப்படி ஒரு ஷசி;ப்|பில் அடங்கியிருக்கும் இரகசியங்களுக்காக அடங்கிப் போகும் மாவை பிறர் மீது இனத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்துவதாகக் குற்றம் சுமத்த தகுதியுடையரா?...

புலிகளை காட்டி கொடுத்த மாவை புலிகளின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாமா?...

உன் முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு முதலில் அதை துடையுங்கள்.

அதை துடைத்து விட்டு அடுத்தவன் மீது குற்றம் சுமத்துங்கள்.
மாவையின் வண்டவாளங்கள் இன்னமும் வெளிப்படும்.

அது வரை காத்திருங்கள்.

ஆரூடன்.

1 comments :

Arya ,  September 6, 2013 at 2:32 AM  

தமிழ் இனத்தை விற்றுப் பிழைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று சொல்வது உண்மை தான் , ஏனெனில் மாவையாவது அரசுக்கு புலிகளை காட்டி கொடுத்தார் , ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகளை காட்டி கொடுப்பதுடன் அவர்களை விடுவித்து வெளிநாடு அனுப்புவது வரை செய்து பெரும் பணம் சம்பாதித்துள்ளார், வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பி வைக்க பட்ட புலிகளையும் , தமிழ் நாட்டில் உள்ள புலிகளையும் விசாரித்தால் எல்லாம் தெரிய வரும் , இவர் தன்னை நம்பிய அரசுக்கும் துரோகம் செய்கின்றார் , இது பாதுகாப்பு அமைச்சுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் கூட தெரியும், என்றாலும் அமைச்சர் டக்ளஸ் அவர்களின் காதிலும் பூ சுற்றி வருகின்றார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com