Saturday, September 28, 2013

சோதனைக்கு மேல் சோதனை! பாகிஸ்தானில் இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com