Friday, August 9, 2013

கணவனுடன் உறவு கொண்டால் மனைவிக்கு ஆயள் தண்டனையாம்! இங்கிலாந்து நீதிமன்றம்!

கணவருடன் உறங்கினால், ஆயுள் தண்டனையை அனுப விக்க வேண்டி இருக்கும் என்று அவருடைய மனைவிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்து நீதிமன்றமே இவ்வாறு எச்சரித்து தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்தார். அவருக்கு அவரின் குடும்பத்தினர் இந்தியாவில் பஞ்சாபில் மணப்பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர்.

திருமணத்துக்காக, அந்த இளைஞன், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை. தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார்.

திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, 'உடலுறவுக்கு' சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் ரத்து செய்யப்படும். எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேட நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு முறையிட்டதுடன் குறித்த இளைஞரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார். அந்த வாலிபர், உடலுறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்றும் எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டார். கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை' என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பை அளித்திருப்பது. இதுவே முதல்தடவையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com