Wednesday, July 10, 2013

யால வனப்பூங்காவில் கஞ்ஜா வளர்ப்பு! பொலிஸாரினால் முற்றுகை!

யால வனப்பூங்காவில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்ஜா செய்கை பொலிஸாரினால் முற்றுகையிடப் பட்டுள்ளது. யால வனப்பூங்கா 4 ஆம் வலயத்தின் மஹகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கஞ்ஜா சேனையொன்று தொடர்பான தகவல்கள் புத்தள பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப் பட்டது.

பொலிஸாரினால் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 330 கிலோ கிராம் கஞ்ஜா, உட்பட உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டதுடன், 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமகாராம நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர் எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com