Wednesday, July 31, 2013

மாணவியர் இருவரை வல்லுறவுக்குட்படுத்தி படம் எடுத்த காடையன் கைது!

மாணவியர் இருவரை நிர்வாணமாக படம் பிடித்த ஆசிரியர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியர் இருவரையே குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாகப்படம் பிடித்த்தாகத் தெரியவருகின்றது.

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றச் செய்வதற்காக உடற்கூற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவியர் இருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர் அங்கிருந்து பியகம பகுதியில் வாடகைக்கு அமர்த்திய அறையொன்றில் வைத்து மாணவியர் இருவரையும் ஈவிரக்கமின்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். மேலும் அவர்களை நிர்வாணமாக்கி படம் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியர் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்த்தையடுத்து சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com