Saturday, July 27, 2013

யாழில் தேர்தல்கால முறைப்பாடுகளை ஏற்க 17 பொலிஸ் கருமபீடங்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 17 பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரத்தியேகமாக பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என நேற்று(26.07.2013) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்த பிரிவுகளில் எந்தநேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யலாம் எனக்குறிப்பிடட அவர் இதுதவிர யாழ். செயலகத்தில் விசேடமாக தேர்தல்கால பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிகள் முறையீடு செய்யவென தனித்தனி பொலிஸ் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை எனக்குறிப்பிட்டார்.

தற்போது வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு யாழ். செயலகத்தில் இடம்பெறுவதால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கட்சிகளின் கூட்டங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்படும் பட்சத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com