Sunday, June 2, 2013

நானூறு வருடங்களாக உறைந்திருந்த தாவரங்கள் உயிர் பெறுகிறது

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் 'லிட்டில் ஐஸ் ஏஜ்' (Little Ice Age) என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோனதாகக் கூறப்படும் தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் தொடங்கியுள்ளன.

கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அழிவடைந்திருந்த சில பாசி வகைகளை பனிப் படலங்கள் கரைந்த இடங்களில் இருந்து எடுத்து வந்து பரிசோதனைக் கூடத்தில் வைத்து அண்மையில் ஆய்வுகளுக்கு உட்படுத்தியபோது அவை மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'Proceedings of the National Academy of Sciences' என்ற பிரசுரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com