Sunday, June 30, 2013

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் -ஹக்கீம்

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் எனவும், இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சில வேளைகளில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  June 30, 2013 at 9:31 PM  

As a Democratic country each party has the right to contest in any province,the voters have to make the best decision based on all sorts of future developments of the province.
great Grand ma`s stories are not worthy at all.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com