அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயப் போகின்றாராம் டக்ளஸ்?
மாகாண சபைகள் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ள அதிகாரத்தை இரத்து செய்வதோடு, மாகாண சபைகளுக்கு சம்பந்தமுள்ள விடயங்கள் தொடர்பான திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போது, அனைத்து மாகாண சபைகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்ட நிபந்தனையை திருத்தி, மேலதிக வாக்குகளின் அடிப்படையில் அவை நிறைவேற்ற வேண்டும் அரசாங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதற்கிணங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எஸ்.தேவராஜின் தலைமையிலேயே அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயவும், அவைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பற்றி ஆராவும் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment