Sunday, March 17, 2013

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் தமிழ் பெண்கள்! – பரபரப்பு தகவல்கள்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையச் சோதனையின்போது பிடிபட்டிருக்கிறார்கள் 30 பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடைய பாஸ்போர்ட்கள் ஒரிஜினல் என்றாலும் அதிலிருந்த சில முத்திரைகளைச் சோதித்தபோது அந்த முத்திரைகள் போலியென்று தெரிய வந்ததும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். தமிழகம், கேரளம், ஆந்திரா மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் அடக்கம்.

வேலைகளுக்காக இவர்கள் வளைகுடா நாடான ஓமனுக்குக் கிளம்புவதற்கு முன்பு பிடிபட்டிருக்கிறார்கள். இதையொட்டி இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகச் சில ஏஜெண்டுகளைக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.

இது ஏதோ ஒரு நாளில் மட்டும் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல. இதன் பின்னால்தான் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் பின்னணி? “சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமை ஸ்தாபனங்களிடமும் பதிவாகியுள்ளது.

பணம் தாராளமாகக் கிடைக்கும் என்று நம்பி எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்குக் கிளம்பும் பெண்கள் அங்கு போனதும்தான் இதை உணர்கிறார்கள். அதிலிருந்து விடுபடுவதற்குள் பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள்.

அதனால்தான் தனியாகவோ, கும்பலாகவோ வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களை விசாரிக்கிறபோதுதான் சிலர் மாட்டுகிறார்கள்”
என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இம்மாதிரியான பெண்களைத் தேர்வு செய்து அனுப்புவதற்கென்றே ஏஜெண்டுகள் பரவலாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை எப்படியோ வெளிநாட்டுக்கு விமானத்தில் ஏற்றி விடுவதோடு அவர்களுடைய கடமை முடிந்து, அவர்களுக்கு அதற்குரிய கமிஷனும்
வந்து விடுகிறது.

ஆனால் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேரும் பெண்கள் என்ன ஆகிறார்கள்? பெரும்பாலும் டூரிஸ்ட் விசா மூலமாகத்தான் இந்தப் பெண்கள் வளைகுடா
நாடுகளுக்குள் நுழைகிறார்கள். இதற்கும் அங்குள்ள யாராவது ‘ஸ்பான்சர்’ பண்ணினால்தான் விசா கிடைக்கும்.

இதன்படி டூரிஸ்ட் விசாவில் வருகிறவர்கள் அதிகபட்சமாக ஒரு மாதம்வரை தான் அங்கு தங்க முடியும். அதற்கு மேல் அங்கு தங்குகிற ஒவ்வொரு
நாளுக்கும் 10 ரியால் (அதாவது சுமார் 1200 இந்திய ரூபாய்) அபராதமாகக் கட்டியாக வேண்டும்.

கட்டாவிட்டால் நேரே அங்குள்ள சிறைதான். வளைகுடா நாடுகளான ஓமன், துபாய் போன்ற நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும்,
அதையெல்லாம் தாண்டி பெண்களைப் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்துவதற்கென்றே தனிக் கும்பல் இருக்கிறது.

நேரே இந்தக் கும்பலின் கையில் இந்தப் பெண்கள் சிக்கிவிடும்போது மொழி தெரியாத நிலையில் இவர்களால் சுலபமாகத் தப்பிவர முடிவதில்லை.

கட்டுப்பாட்டிற்குப் பெயர்போன துபாயில் இந்தியப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்தும் இடங்கள் இருப்பதை வருத்தத்துடன்
சொல்கிறார்கள் அங்கு வேலை பார்க்கம் தமிழர்கள்.

“எல்லாம் பகிரங்கமாக நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வரவழைக்கப்படுகிறார்கள். இங்கு வந்து இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அழும் பெண்கள் கூட ஒரு மாத காலத்திற்குள் வேறு வழியில்லாமல் இதற்குப் பழகிவிடுகிறார்கள். அந்தக் கும்பலாகப் பார்த்து விடுவித்தால்தான் சொற்பப் பணத்துடன் இவர்கள் சொந்த ஊருக்குப் போய்ச் சேர முடியும்” என்கிறார் துபாயில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்.

வளைகுடா நாடுகளில் வெளிவரும் ‘கல்ஃப் நியூஸ்’ ஆங்கிலப் பத்திரிகையில் வந்த ஒரு செய்திக் கட்டுரை தென்னிந்தியாவிலிருந்து சென்ற பெண்கள் அங்கு பலவிதமான சிரமங்களைச் சந்திப்பதையும், பாலியல் தொழிலில் இருக்கும் பலவந்தமான சூழ்நிலையையும் வெளியே கொண்டு வந்தது.

அதில் கேரளாவிலிருந்து ‘வீட்டு வேலை’ என்கிற பெயரில் துபாய்க்கு அழைத்துவரப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பிறகு கைதாகிச் சிறைக்குப் போய் விடுதலையான இரு பெண்களின் பேட்டி வெளியாகியிருந்தது. “ஏஜெண்டுகள் அங்கு சொன்னது ஒன்று. இங்கு வந்ததும் நடந்தது வேறு. எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள்.

இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” என்று கண்கலங்கப் பேசியிருந்தார்கள் அந்தப் பெண்கள். வளைகுடா நாடான ‘ஓமன்’ தலைநகரான மஸ்கட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தியப் பெண்களைக் கொண்டுவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கென்றே பிரத்யேகமாக சில இடங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலிருந்து மட்டும் இங்கு வந்து குடியேறி தொழில் அல்லது வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் இரண்டரை லட்சம் பேர். இந்தியாவிலிருந்து பெண்கள் ‘வீட்டு வேலை’என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டு உபயோகிக்கப்படுவது இவர்களுக்குத் தெரிந்தும் ‘நாங்கள்
ஒன்றும் செய்ய முடிவதில்லை’ என்று கைவிரிக்கிறார்கள்.

முறையான விசா இல்லாததே பெரிய குற்றமாகக் கருதப்படுகையில் அங்கு சென்று பாலியல் தொழிலில் (ஈடுபடுத்தப்பட்டாலும்) ஈடுபடுவது கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டு வளைகுடா நாடுகளில் உள்ள சிறைக்குப் போய் கஷ்டப்பட வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது இந்தப் பெண்களுக்கு.

இந்தியத் தூதரகம் தலையிட்டு இவர்கள் விடுதலையாகி, இந்தியா திரும்புவதற்குள் பலருக்கு உயிர் போய்விட்டுத் திரும்பி வந்த மாதிரியான நிலைமை. பத்து மாதங்களுக்கு முன்பு ஓமனில் உள்ள தொழிலாளர் துறை நடத்திய சோதனையில் முறையான விசா இல்லாமல் பிடிபட்டுச் சிறைக்குப் போனவர்கள் மூவாயிரம் பேர். இவர்களில் ‘பாலியல் தொழிலில்’ ஈடுபட்ட பெண்களும் அடக்கம்.

இவ்வளவு அவஸ்தைகளுக்குப் பிறகும் இந்தப் பெண்கள் கையில் சில ஆயிரங்களுடன் மட்டுமே வீடு திரும்ப முடிகிறது. இன்னும் சிலர் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற மனநிலையில் கையில் பணமில்லாத நிலையில் ஊர் திரும்புகிறார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இளம் பெண்கள் போய் ஏமாந்து திரும்பினாலும், இந்த வலையில் இவர்களைச் சிக்கவைக்கும் ஏஜெண்டுகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுக்கப்பட்டாலும் இவர்கள் இன்னும் எப்படித் தொடர்ந்து செயல்பட முடிகிறது? வெளிநாடுகளுக்குப் போகும் தமிழகத் தொழிலாளர்களைப் பற்றிய ‘சர்வே’யை எடுத்திருக்கும் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் சொன்ன தகவல் இன்னும் அதிர வைக்கிறது.

“இந்தியத் தூதரகத்துக்கு அங்கு பெண்கள் கொண்டு போகப்பட்டு படுகிற சிரமங்கள் நன்றாகத் தெரியும். அவர்களும் எச்சரிக்கிறார்கள். இருந்தும் அதையும் மீறிப் பெண்களைப் பல வழிகளில் அனுப்புவது தொடர்கிறது.

தர்மபுரி, சேலம் பகுதிகளில் இளம் வயதில் விதவையான பெண்களைத் தேர்ந்தெடுத்து அங்கு அனுப்பிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.

அதோடு அங்கு போய்த் தப்பித் தவறிக் கர்ப்பமடைந்துவிட்டால் சட்டரீதியான சிக்கலைச் சந்திக்க வேண்டியிருப்பதால் சில பெண்களை அவர்களுடைய கர்ப்பப்பையை அகற்றிவிட்டு அனுப்புகிற கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?” என்கிறார் அவர்.

இது அதிர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குப் பயணப்படத் தயாராகிக் கொண்டிருக்கையில் யாரை உஷார்ப்படுத்துவது?

8 comments :

Arya ,  March 17, 2013 at 5:32 PM  

என்ன தான் நடந்தாலும் இவள்கள் அரபுகாறனுக்கு கவட்டை விரிக்க வரிசையில் நிக்கிறாள்கள்

Anonymous ,  March 18, 2013 at 10:33 AM  

நம்ம ஆர்யாவின் மனைவி ரொம்ப ஆசப்படுரா போல..... ஏன்னா இவர் இந்த விசயத்தில அடிக்கடி ஆவேசப்படுறார்.

நண்பர் ஆர்யா அவர்களே, உங்க மனைவி உங்க இயலாமைய உணர்ந்திருக்கணும், இல்லாட்டி அரபிக் காரண்ட வேலைட ருசிய கண்டிருக்கணும்.

Arya ,  March 21, 2013 at 2:50 AM  

My Age is stil 19 yrs, dont have wife ,but i try to get soon a muslim gf.

Anonymous ,  March 21, 2013 at 11:21 AM  

If your age is still 19, then be careful in your words while commenting against anyone. You can marry whoever you want, it's doesn't matter.

யூரியா ,  March 21, 2013 at 11:23 AM  

தம்பி ஆர்யா!!!! இந்த அவமானம் உனக்கு தேவையா????

பேசாம போறியா ,  March 21, 2013 at 2:47 PM  

அசிங்கப்பட்டான் ஆட்டோ காரன்.

Arya ,  March 28, 2013 at 1:10 PM  

பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து இவ் உலகிற்கு குழந்தை ஒன்றை ஈன்று அளிப்பவள் தாய். அவளது உதிரத்தை பாலாக மாற்றி பருகத் தருகிறாள். தாயானவள் சகல சுமைகளையும் தானே சுமந்து கொள்ளும் உயர் ஸ்தானத்தில் இருப்பவள். இதற்கு சமமான நிலையில் இருப்பது தாய் நாடும் தான் பிறந்த ஊருமாகும்.

ஆனால் நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்றி முஸ்லிம்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய, அதிகாரங்களை தம்வசப் படுத்திக் கொண்டு போனால் கூடிய கெதியில்; முஸ்லிம்களின் கையின் கீழ் சிங்களவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுது சிங்களவர்களுக்கு வெளியேறுவதற்கு ஒரு நாடோ பின்பற்றுவதற்கு சமயமோ இல்லாது கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடக்காது முளையிலே கிள்ளி எரிய வேண்டிய காலம் சிங்களவர்களுக்கு உதயமாகியுள்ளது.

இலங்கை இன்னும் 20- 30 வருடங்களில் இஸ்லாமிய மயதாவதற்கு முஸல்மான்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1996இல் மாலைத் தீவில் ஒன்று கூடிய முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகள் 2020 இல் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தான் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் நாட்டை உருவாக்கவும் பின்னர் முழு நாட்டையும் முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு வரைபடம் (பிலேன்) வரையப்பட்டுள்ளது.(திட்டம் தீட்டப்பட்டுள்ளது)

தற்கால சனத்தொகை விபரத்தை (குடிசன மதிப்பீடு) அரசு இன்னும் வெளியிடாது இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் 100 சதவீதமாக இருப்பதாலும், முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் பெருந்தொகை வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்குக் கைமாறாக அதனை மறைப்பதுமாகும். முஸ்லிம் சனத்தொகைப் பெருக்கம் அமைதியானதாயினும் அது மிகக் மிகக் கொடூரமானது.

நாட்டில் முஸ்லிம் சனத்தொகை 50 சதவீதமானதும் அவர்கள் ஷரீஹா சட்டத்தை அமுல் படுத்தி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர்கள்.

Arya ,  April 8, 2013 at 4:06 AM  

இலங்கைப் பணிப் பெண்ணை சவுதி நாய் கூண்டில் அடைத்தது அம்பலம்!

சவுதி அரேபியாவின் தமாம் பகுதியிலுள்ள பணிப் பெண்கள் தங்குமிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துன்பகரமான சம்பவமொன்றை இலங்கையர் ஒருவர் பதிவுசெய்துள்ளார்.


பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் இந்த காட்சிகளை வழங்கினார்.



சவுதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.youtube.com/watch?v=4bR8s6o9ibc&feature=player_embedded

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com