யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் எச்சரிக்கை
கொழும்பிலிருந்து சென்ற சிலர் யாழ்ப்பாணத்தில் புதிய வங்கிகளை அமைத்து பாரியளவில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருவதாக பெலிஸாருக்கு தகவல் கிட்டியுள்ளதாக எனவே புதிய வங்கிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களிடம் உயர் வட்டி வீதங்களை வழங்குவதாகத் தெரிவித்து ஏமாற்றி பலகோடி ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
மாதாந்தம் நூற்றுக்கு நான்கு வீத வட்டி வழங்குவதாகத் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக வல்வெட்டித்துறையில் இவ்வாறு மூன்று வங்கிகள் இயங்கி வந்ததுடன் இவ்வாறு ஆரம்ப காலத்தில் உரிய முறையில் வட்டிப்பணம் வழங்கப்பட்டுள்ளது அதனை நம்பி பலர் தமது பல கோடி ரூபா பணங்களை வங்கியிலிட்டதை அடுத்து வங்கியை நடத்திய அனைவரும் வங்கியை மூடிவிட்டு சென்றுள்ளனர்.
போலி வங்கிகளை நப்பாது பலர் பத்து லட்சம், இருபது லட்சம் மற்றும் ஒரு கோடி ரூபா என தமது பணத்தை மக்கள் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment