Sunday, February 3, 2013

கூடிய வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மாவட்ட அமைச்சு பதவி ! ஏப்ரல் மாதம் வழங்கப்படும்?

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியில் அதிக வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக இடம்பெற்ற தேர்தலின் அடிப்படையிலேயே மாவட்ட அமைச்சர் என்ற ரீதியில் இப்பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்நியமனங்கள் இடம்பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன்போது நாமல் ராஜபக்ஷ, லக்ஷ்மன் வசந்த பெரேரா, நிஷாந்த முத்துஹெடிகம உட்பட சிலருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com