Monday, February 18, 2013

பங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் மட்டக்களப்பில் மூவர் கைது

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் முறையிட்டப்பட்டதாக அதன் இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு (4ம் மாடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com