Sunday, February 17, 2013

ஆணாகப் சிறைக்கு போனவர் சிறையிலிருந்து பெண்ணாக வெளியே வந்தார்.

பிரித்தானியாவில் சிறைக்கு சென்ற ஆண்ணொருவர் சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வரும்போது பெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கென்ட் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த றாபொர்ட் ஹில்டன், கடந்த 1992ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.சிறைக்கு ஆணாக போனார்.

ஆனால் வெளியே வரும்போது ரிபெக்கா என்ற பெண்ணாக வெளியே வந்துள்ளார். சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்த றாபொர்ட், அதற்கேற்ப அவரது உடலிலும் மாற்றங்கள் இருந்தன.

இருந்தாலும் இதை அப்போது அவர் பெரிதாக கவனிக்கவில்லை. 1992ம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்குப் போய் விட்டார்.
பல வருடத்தை சிறையில் கழித்த அவர், 2011ம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். முழுமையான பெண்ணாக மாறினார்.

சமீபத்தில் அவர் விடுதலையானார். பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த அவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com