தினக்குரல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யமுடியவில்லை - சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
யாழ்.தினக்குரல் பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாள காண முடியவில்லையென்றும் அதனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையென்றும் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அதியட்சகர் மெகமட் ஜப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.தினக்குரல் பத்திரிக்கைகள் தீயிட்டு எரிக்கப்பட்டதோடு, வினியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment