Friday, February 8, 2013

குங்குமப் பூவின் மருத்துவ குணம்!!

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

சருமப் பொலிவுக்கு நெல்லிக்காய் பச்சடி மிகவும் நல்லது. உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க கூடியது. ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் நெல்லிக்காய் உடலில் சேரவேண்டும்.முதல் நாள் இரவு சுமார் மூன்று பாதாம் பருப்பை ஊறவைத்து விட்டு, மறுநாள் காலை தோலுடன் மென்று சாப்பிட்டாலும் சருமம் பளிச் என்று இருக்கும்.

சருமப் பொலிவுக்கு நெல்லி, கொய்யா, எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய், கேரட், இளநீர் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com