கச்சதீவு அந்தோனியர் திருவிழா (படங்கள் இணைப்பு)
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இலங்கை- இந்திய மக்களின் பங்கேற்றலுடன் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா நிகழ்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். ஆயரின் தலைமையில் இலங்கை இந்திய நாடுகளின் அருட் தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றியதுடன், திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டிருந்தன.
காலை 8.00 மணிக்குத் திருவிழா திருப்பலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, யாழ்ப்பாணத்திலுள்ள பிரதி இந்தியத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாணத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். கடற்படை கட்டளைத் தளபதி ஷிரந்த உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவன் உட்பட இலங்கை இந்திய நாடுகளிலிருந்து 1000 கணக்கான பக்தர்ள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment