Sunday, February 17, 2013

யாழ்.திருநெல்வேலியில் அதிசக்தி வாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் அதி சக்தி வாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை இரண்டும் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனம்பாத்தியை வெட்டும் போது கறுப்பு நிறத்திலான பையில் சுற்றப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com