அவர்களால் எப்படிச் சட்டம் போட முடியும்?
நாட்டிலுள்ள சட்டம் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சில பஸ் சங்கங்கள் வெவ்வேறான தவறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கா குறிப்பிடுகிறார்.
எந்தவொரு சங்கத்திற்கும் சட்டம் பிறப்பிப்பதற்கோ, சட்டத்தை மறுதலிப்பதற்கோ உரிமை கிடையாது என அமைச்சர் குறிப்பிடுகிறார்.
பஸ்களில் வியாபாரம் செய்யக்கூடிய சுயதொழில் வியாபாரிகள் இனி அவ்வாறு வியாபாரம் செய்யமுடியாது என இலங்கைத் தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது பற்றி தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும்போதே சீ.பீ. ரத்நாயக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும், பஸ்களில் வியாபாரம் செய்வதாகப் பாசாங்கு செய்து பெண்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதும், பொய்களைச் சொல்லி பணம் வசூலிப்பதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர் என்றும் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment